தமிழனின் நன்றியுணர்ச்சி
தமிழ்மண நிர்வாகி காசி அவர்களின் சுயசரிதை தொடர் சமீப காலமாக வருகிறது. தமிழ்மண உருவாக்கத்தில் அவர் பட்ட கஷ்டங்களை படிக்கும்போது பெருமையாக இருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த தொடருக்கு வரும் பின்னூட்டங்கள். முன்பு காசி காலையில் சூரியன் உதிக்கிறது என்றால் கூட ஒரு பெரிய கூட்டமே காசியண்ணா பிரமாதம் என்று பின்னூட்டம் இடுவார்கள். இப்போது பார்த்தால் யாருமே அவர் பதிவில் அவரின் கஷ்டங்களுக்கு நன்றி சொல்ல காணோம்.
இதற்கும் அவரின் சமீப அறிவிப்பிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று சமீபத்தில் நாங்கள் நண்பர்கள் லால்பார்க்கில் கூடிய போது பேசிக்கொண்டோம். தமிழ்மணத்தை விற்பனை செய்துவிட்டதால் இனி காசிக்கு பின்னூட்டம் அளித்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்று தமிழர்கள் முடிவு செய்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. பின்னூட்டம் பெரிய அளவில் வராததற்கு வேறு நியாயமான காரணங்கள் கண்டிப்பாக இருக்கும்.
0 Comments:
Post a Comment
<< Home